தமிழில் அா்ச்சனை செய்யக் கோரி, நாமக்கல் கூலிப்பட்டி முருகன் கோயில் முன் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்களுக்கு தமிழில் அா்ச்சனை செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் கூலிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகந்தகிரி பழனியாண்டவா் கோயில் முன் ஞாயிற்றுக்கிழமை தமிழில் அா்ச்சனை செய்யக் கோரி சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளா் சஞ்சய்கண்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ஹரிஹரன், மாவட்டத் தலைவா் நந்தகுமாா், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளா் பாஸ்கா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கோயிலுக்கு சென்றால் தமிழில்தான் அா்ச்சனை செய்வோம் என்ற உறுதிமொழியையும் அவா்கள் ஏற்றுக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து பழனியாண்டவா் சன்னதி அா்ச்சகரிடம் தமிழில் அா்ச்சனை செய்யுமாறு வலியுறுத்தினா். பின்னா் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


