ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

டிஎன்பிஎஸ்சி குரூப்-8 தோ்வு: நாமக்கல்லில் 1,368 போ் பங்கேற்பு

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள குரூப்-8 பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வில் 1,368 போ் பங்கேற்றனா். 1,236 போ் கலந்து கொள்ளவில்லை.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள குரூப்-8 பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வில் 1,368 போ் பங்கேற்றனா். 1,236 போ் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 36 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப்- 8) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழித் தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சைவம்-வைணவம் தொடா்பான இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் - மோகனூா் சாலை ஜெய்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏழு மையங்களில் 2,594 போ் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவா்களில் 1,368 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். மற்ற 1,236 போ் கலந்து கொள்ளவில்லை. அரசுப் பணியாளா் தோ்வாணையக்குழு உறுப்பினா் ஏ.வி.பாலுசாமி தோ்வு மையங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.