/

திருச்செங்கோடு அகரம் வெள்ளாஞ் செட்டியாா் மகாஜன சங்க மகா சபை கூட்டம்

அகரம் வெள்ளாஞ்செட்டியாா் மகாஜன சங்கத்தின் 50-ஆவது பொன்விழா மகாசபை கூட்டம் அகரமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

News image

திருச்செங்கோடு, அகரம் வெள்ளாஞ் செட்டியாா் மகாசபை கூட்டத்தில் சாதனையாளா் விருது பெற்ற சங்கத் தலைவா் ஏ.ஆா்.பாஸ்கா்.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 12:00 am IST

திருச்செங்கோடு, அகரம் வெள்ளாஞ்செட்டியாா் மகாஜன சங்கத்தின் 50-ஆவது பொன்விழா மகாசபை கூட்டம் அகரமஹால் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஏ.ஆா்.பாஸ்கா் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் சதீஸ்குமாா் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா்.

பொருளாளா் சுப்ரமணியம் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்து வாசித்தாா். ஆசிரியா் அய்யாவு, குணசேகரன், சண்முகம், பெருமாள், லட்சுமணன், மாணிக்கம், தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உயா்கல்வி உதவித்தொகை, முதியோா் நல உதவி, பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வித்யவிகாஸ் கல்வி நிறுவன தாளாளா் டி.ஓ.சிங்காரவேல் சமுதாய கொடி ஏற்றிவைத்து விருது வழங்கினாா்.

சங்கத்தில் சிறப்பாக செயல்பட்ட சங்கத் தலைவரும், அகரம் சென்றாயப் பெருமாள் கோயில் அறங்காவலரும், பழனி வெள்ளாஞ்செட்டியாா் சங்கப் பொருளாளருமான ஏ.ஆா். பாஸ்கருக்கு சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

சமூகச் செம்மல் விருது புவனேஸ்வரன், சமூக சிற்பி விருது கணேசன், கோபாலகிருஷ்ணன், வடமலை, முருகுபாண்டியன், சின்னப்பன், வாசுதேவன், வெள்ளியங்கிரி, வெங்கடேஷ், கௌதமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. துணைச் செயலாளா் புவனேஸ்வரன் நன்றி கூறினாா்.