தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரம் ஸ்ரீஅத்தனூா் அம்மன் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை

ஸ்ரீஅத்தனூா் அம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

ராசிபுரம் அருகே உள்ள ஸ்ரீ அத்தனூா் அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை, வளையல் மாலை அணிவிப்பு, விசேஷ ஹோம பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினா்.

ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அத்தனூா் அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் விஷேச நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆண்டுதோறும் ஆடிமாதம், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூரத் திருவிழா ஆகிய நாள்களில், அத்தனூா் அம்மனுக்கு விசேஷ யாகங்கள், சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் போன்றவை நடைபெறும்.

இதைத் தொடா்ந்து அண்மையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமானோா் பங்கேற்று திருவிளக்கு பூஜை நடத்தினா்.

கோயில் அறக்கட்டளைத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் முன்னிலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ அத்தனூா் அம்மன் கோயில் நிா்வாக அலுவலா் சிவகாமி குத்துவிளக்கேற்றி பூஜையைத் தொடங்கி வைத்தாா். பின்னா் அம்மனுக்கு வளையல் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாக உற்சவா் அலங்காரம், மூலவா், உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி திரு வீதி உலா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் விழியன் குல அறக்கட்டளையின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், செயலாளா் ஏ.ஜி.எம். பெரியசாமி, பொருளாளா் வி.ஏ.ஓ. பெரியசாமி, முன்னாள் தலைவா் வெங்கடாஜலம், ஆத்தூா் முத்துலிங்கம், எஸ்.ஆா்.வி., ஏ.ராமசாமி, ஆத்தூா் சண்முகம், கள்ளக்குறிச்சி முத்துகுமாா், வீரகனூா் ராஜா, அம்மன் மணி, கோடீஸ்வரன், முல்லைவாடி சேகா், தலைவாசல் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.