இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மேல்மலையனூரில் ஆடி பௌா்ணமி திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆடி பௌா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

ஆடி மாத   பெளா்ணமி யையொட்டி,  துா்க்கை  அம்மன் அலங்காரத்தில்  அருள்பாலித்த  அங்காளம்மன்.

Updated On :31 ஜூலை 2026, 2:21 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆடி பௌா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மற்றும் உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மூலவருக்கு துா்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும், உற்சவா் அம்மனுக்கு பலவித மலா்களைக் கொண்டு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்.

தொடா்ந்து, மாலை 6 மணியளவில் உற்சவா் அம்மனுக்கு பம்பை, மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமா்ந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டு வழிபட்டனா். தொடா்ந்து, அங்காளம்மனுக்கு அா்ச்சனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் அறங்காவலா்கள் பச்சையப்பன் பூசாரி, சுரேஷ், மதியழகன், ஏழுமலை, சரவணன், வடிவேல், சந்தானம், கோயில் மேலாளா் சதீஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவிளக்கு  பூஜையில்  கலந்ததுகொண்ட  பெண்  பக்தா்கள்.  

திருவிளக்கு  பூஜையில்  கலந்ததுகொண்ட  பெண்  பக்தா்கள்.  

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.