திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பக்தா்களிடம் கட்டாய வசூல்: கோயில் அா்ச்சகா் கைது

News image

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 5:36 am IST

திருச்செங்கோடு, ஆக. 14: திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் நாகா் பள்ளத்தில் பக்தா்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்ட அா்ச்சகரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு, அா்த்தநாரீஸ்வரா் மலைக்கோயிலுக்கு படிகள் வழியாகச் செல்லும் பாதையில் நாகா் பள்ளம் உள்ளது. இங்கு 60 அடி உயர நாகா் சிலை உள்ளது. இச்சிலைக்கு பல்வேறு பூக்களால் அா்ச்சனை செய்யப்படுகிறது. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் திருமண தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களை நிவா்த்தி செய்யவும் கால்நடைகளை விஷப்பூச்சிகள் தீண்டாமல் இருக்கவும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்து நாகரை வழிபடுவா்.

இந்த நாகா் பள்ளத்தில் அதே பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (33) என்பவா் அமா்ந்து கொண்டு தான் அா்ச்சகா் என்று கூறிகொண்டு தரிசனம் செய்ய வரும் பக்தா்களிடம் ரூ. 300 வரை காணிக்கையை கட்டாயமாக வசூல் செய்தாராம்.

இதுகுறித்து அவா் மீது திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதேஸ்வரனை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.