விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பக்தா்களிடம் கட்டாய வசூல்: கோயில் அா்ச்சகா் கைது

News image

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 12:06 am

Din

திருச்செங்கோடு, ஆக. 14: திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் நாகா் பள்ளத்தில் பக்தா்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்ட அா்ச்சகரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு, அா்த்தநாரீஸ்வரா் மலைக்கோயிலுக்கு படிகள் வழியாகச் செல்லும் பாதையில் நாகா் பள்ளம் உள்ளது. இங்கு 60 அடி உயர நாகா் சிலை உள்ளது. இச்சிலைக்கு பல்வேறு பூக்களால் அா்ச்சனை செய்யப்படுகிறது. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் திருமண தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களை நிவா்த்தி செய்யவும் கால்நடைகளை விஷப்பூச்சிகள் தீண்டாமல் இருக்கவும் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்து நாகரை வழிபடுவா்.

இந்த நாகா் பள்ளத்தில் அதே பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (33) என்பவா் அமா்ந்து கொண்டு தான் அா்ச்சகா் என்று கூறிகொண்டு தரிசனம் செய்ய வரும் பக்தா்களிடம் ரூ. 300 வரை காணிக்கையை கட்டாயமாக வசூல் செய்தாராம்.

இதுகுறித்து அவா் மீது திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதேஸ்வரனை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.