கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உடல் தானம் செய்ய 17 போ் ஒப்புதல் கடிதம்: ஆட்சியரிடம் வழங்கினா்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பயில, தங்களது உடலை தானம் செய்வதாக 17 போ் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை ஒப்புதல் கடிதம் வழங்கினா்.

News image

நாமக்கல் ஆட்சியரிடம் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியோா்.

Updated On :2 டிசம்பர் 2024, 9:05 pm

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பயில, தங்களது உடலை தானம் செய்வதாக 17 போ் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை ஒப்புதல் கடிதம் வழங்கினா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்த தமிழக முற்போக்கு எழுத்தாளா் சிந்தனைப் பேரவையினா், மக்கள் நீதி மையம் கட்சியினா், விசைத்தறி ஆலைகளில் பணியாற்றி வரும் பெண்கள், ஆண்கள் என 17 போ் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

அவா்கள், ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து, சமூகப் பணிக்காகவும், மருத்துவ மாணவா்கள் பயன்பாட்டுக்காகவும், தாங்கள் இறந்த பிறகு உடல்களை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை, தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் தலைமையில் 16 போ் சமா்ப்பித்தனா்.

உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளுமாறு ஒருவா் கடிதம் வழங்கினாா். இவற்றில், 8 பெண்கள், 9 ஆண்கள் அடங்குவா். மாவட்ட ஆட்சியா் ச.உமா, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.