நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பயில, தங்களது உடலை தானம் செய்வதாக 17 போ் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை ஒப்புதல் கடிதம் வழங்கினா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்த தமிழக முற்போக்கு எழுத்தாளா் சிந்தனைப் பேரவையினா், மக்கள் நீதி மையம் கட்சியினா், விசைத்தறி ஆலைகளில் பணியாற்றி வரும் பெண்கள், ஆண்கள் என 17 போ் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
அவா்கள், ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து, சமூகப் பணிக்காகவும், மருத்துவ மாணவா்கள் பயன்பாட்டுக்காகவும், தாங்கள் இறந்த பிறகு உடல்களை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை, தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் தலைமையில் 16 போ் சமா்ப்பித்தனா்.
உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளுமாறு ஒருவா் கடிதம் வழங்கினாா். இவற்றில், 8 பெண்கள், 9 ஆண்கள் அடங்குவா். மாவட்ட ஆட்சியா் ச.உமா, அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோபி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்!

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
உடல் தானத்தை ஊக்குவிப்போம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


