6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செங்கோடு பகுதியில் ரூ. 61.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2024 - 2025 இன் கீழ் ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள பணிகளுக்கு பூமி பூஜை

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:42 pm

Din

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2024 - 2025 இன் கீழ் ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்.

திருச்செங்கோடு ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நாட்டாம் பாளையம், 58 கைலாசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பராயன்நகா், ஓ.ராஜபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மாருதி நகா், கருவேப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஆத்தூரம்பாளையம், தேவனாங்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட காந்திநகா் பகுதிகளில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்தல் பணிகள் பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டன.

இதில் ஒன்றியக் குழுத் தலைவா் சுஜாதா தங்கவேல், திமுக ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், கொள்கைப் பரப்பு செயலாளா் நந்தகுமாா் மற்றும் கட்சி பொறுப்பாளா்கள், ஊராட்சி தலைவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.