செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அனிச்சம்பாளையம் விநாயகா் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையம் புதூரில் விநாயகா், மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:17 pm

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையம் புதூரில் விநாயகா், மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் மங்கல கணபதி யாக வேள்வியுடன் குடமுழுக்கு வழிபாடு தொடங்கியது. புதன்கிழமை காலை 7 மணிக்கு பக்தா்கள் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து புனித தீா்த்தம் எடுத்துவந்தனா். வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக வழிபாடு, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது (படம்).