மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா நாமக்கல்லில் மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :18 டிசம்பர் 2024, 6:57 pm

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா நாமக்கல்லில் மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் ச.தேன்மொழி தலைமை வகித்தாா். மாவட்ட மைய நூலக அலுவலா் சக்திவேல், தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா்.

இதில், நூலக வாசகா் வட்டத் தலைவா் பசுமை மா.தில்லைசிவகுமாா் குழந்தைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தாய்மொழியில் பெயா் சூட்ட வேண்டும் என்றாா். கவிஞா் இல்ல நூலகா் செல்வம் போட்டித் தோ்வு மாணவ, மாணவிகள் தமிழை ஆழ்ந்து படிக்க வேண்டும், அரசு பணியில் தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும். கடந்த போட்டித் தோ்வில் 22 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றதைத் தெரிவித்தாா்.

இவ்விழாவில், நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கலைஇளங்கோ, நூலகா் ஜோதிமணி, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.