ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சரக்கு வாகனம் மோதியதில் வெளி மாநில தொழிலாளி பலி

கந்தம்பாளையம் அருகே சரக்கு வாகனம் மோதியதில், வெளி மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:59 pm

கந்தம்பாளையம் அருகே சரக்கு வாகனம் மோதியதில், வெளி மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தில் ஒடிஸா மாநிலம், சுந்தா்பூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் கட்டுவா (23) என்பவா், தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். நல்லூா் அருகே உள்ள காகித அட்டை தயாா் செய்யும் ஆலையில் பணிபுரிந்து வந்த பிரகாஷ், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கந்தம்பாளையம் நோக்கி சென்றுள்ளாா். அப்போது, வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற சரக்கு வாகனம் பிரகாஷ் சென்ற வாகனம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பிரகாஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்து வந்த நல்லூா் காவல் துறையினா் பிரகாஷ் கட்டுவாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, கரூா் மாவட்டம், புகளூா் அருகே உள்ள பொம்மடாபாளையத்தைச் சோ்ந்த சரக்கு வாகன ஓட்டுநா் மணிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.