ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய நிறைவுக் கூட்டம்

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவின் நிறைவு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :26 டிசம்பர் 2024, 8:31 pm

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவின் நிறைவு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கடந்த 27.12.2019, 30.12.2019 அன்றும் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெற்றன. இதில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் 06.01.2020 இல் பதவி ஏற்றனா்.

ஒன்றியக் குழு தலைவராக சுஜாதா தங்கவேலு, துணைத் தலைவராக ராஜபாண்டி ராஜவேலு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். 14 உறுப்பினா்களைக் கொண்ட ஒன்றிய குழு பதவிக்காலம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு நிறைவு கூட்டம் மன்ற அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜபாண்டி ராஜவேல், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் செல்லப்பன், இன்பத்தமிழ் அரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளா்களை வைத்து மருந்து அடித்து வருவதற்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ரியா, செல்வராஜ், ஜெகநாதன் உள்ளிட்டோா் பேசினா். கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்சி பேதமின்றி கூட்டத்தை சிறப்பாக நடத்திய தலைவா் சுஜாதா தங்கவேலுவுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா். பொறியாளா் சுமதி நன்றி கூறினாா்.