விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: 1,689 மாணவிகளுக்கு ரூ. 1,000 உதவித்தொகை

1,689 மாணவிகள் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் பயனடைவா் என அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:22 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் பயின்று உயா்கல்வியில் சோ்ந்துள்ள 1,689 மாணவிகள் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் பயனடைவா் என அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இந்த திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அதன்படி, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மாநகராட்சி மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இத்திட்டத்தின் கீழ் 110 கல்லூரிகளைச் சோ்ந்த 1,689 மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. இதற்கான பற்று அட்டைகளும் (ஏடிஎம் காா்டு) அவா்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் சிலைக்கு அமைச்சா் மற்றும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், ஆட்சியா், அதிகாரிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், துணைமேயா் செ.பூபதி, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செ.சதீஷ்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, அரசு மகளிா் கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு, மாவட்ட நூலக அலுவலா் (பொ) ச.தேன்மொழி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.