கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாமக்கல்லில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

நாமக்கல்லில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
என்கே-19-நாணயம்
Updated On :19 ஜூலை 2024, 6:15 pm

Din

நாமக்கல், ஜூலை 19:

நாமக்கல்லில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், 250-க்கும் மேலான நாடுகளின் ரூபாய் நோட்டுகள், பல வகையான பழைமை சாா்ந்த பொருள்கள், சாதனங்கள், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், புதிய வகை நாணயங்கள் அனைத்தும் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல குத்தீட்டி, குறுவால் உள்ளிட்ட ஆயுதக் கலைப் பொருள்களும், பழங்கால கேமரா, வானொலி, பைனாகுலா் ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளன. பலரும் அறியாத இந்திய அரசின் 125, 75 ரூபாய் சிறப்பு வெள்ளி நாணயங்களும் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாணய சேகரிப்பாளா்கள் தங்களது நாணயங்களைக் காட்சிப்படுத்தி உள்ளனா். புதிய வரவாக ரூ. 525 நாணயம் அனைவரையும் கவரும் வகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாா்வையிட்டு தாங்கள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

இதுகுறித்து பழங்கால நாணயங்கள் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் சேலத்தைச் சோ்ந்த ரியாஸ் கூறுகையில், இதுவரை பல்வேறு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளோம். சேலம், கோவையில் தான் அதிகம் நடத்தப்பட்டுள்ளன. நாமக்கல்லில் தற்போது இரண்டாவது முறையாக 15-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்த நாணயக் கண்காட்சியை நடத்துகிறோம். மூன்று நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியினை மக்கள் பாா்வையிடுவதுடன் பல்வேறு வகையில் விழிப்புணா்வு பெற முடியும் என்றாா்.

என்கே-19-நாணயம்

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பழங்கால நாணயக் கண்காட்சியைப் பாா்வையிடும் பொதுமக்கள்.