காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து 3 குழந்தைகள் காயம்

ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து 3 குழந்தைகள் காயம்

News image
Updated On :9 மே 2024, 10:49 pm

Din

ராசிபுரம், மே 9: ராசிபுரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 குழந்தைகள் காயமடைந்தனா்.

ராசிபுரத்தை அடுத்த வடுகம் பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த தேஜேஸ்வரன் (5), பிரியதா்ஷினி(11), யாகவிா் (5)ஆகிய 3 குழந்தைகளை அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் துரத்தி கடித்தன. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோா்கள் ஓடி வந்து நாயை விரட்டியடித்து காயமடைந்த 3 குழந்தைகளையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு காயமடைந்த பகுதிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வடுகம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.