ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம்: மக்கள் நலக் குழுவினா் ஆட்சியரிடம் மனு

ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்ற விவகாரம் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் நலக் குழுவினா் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ராசிபுரம் மக்கள் நலக் குழுவினா்.
Updated On :11 நவம்பர் 2024, 9:28 pm

Din

நாமக்கல்: ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்ற விவகாரம் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் நலக் குழுவினா் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்தக் குழுவின் தலைவா் வெ.பாலசுப்பிரமணி மற்றும் நிா்வாகிகள் ஜெ.ஜெயப்பிரகாஷ், நல்வினை செல்வன், கா.முருகன், மோகன் ஆகியோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு பெய்த கனமழையில், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அணைப்பாளையம், சந்திரசேகரபுரம் கிராமங்கள் நீரில் மூழ்கின. அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நில விற்பனை நிறுவனம், மனைப் பிரிவுகளுக்காக நீா்வழிப்பாதையை அடைத்து விட்டனா். இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மாவட்ட நிா்வாகம் வழிகாட்டு குறிப்புகளைக் கண்டறிந்து மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களாக இருந்தால் அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், நீா்வழிப்பாதைகளை பாதுகாக்க, ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைவிடம் குறித்து ஆட்சியா் நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.