ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா: மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியா்!

குழந்தைகள் தின விழாவையொட்டி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கினாா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:05 pm

குழந்தைகள் தின விழாவையொட்டி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கினாா்.

மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 136-ஆவது பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியா் ச.உமா பங்கேற்று அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

முன்னதாக முன்னாள் பிரதமா் நேருவின் உருவப்படத்துக்கு அவா் மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து,நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏ.டி.எம். மையத்தை ஆட்சியா் திறந்து வைத்தாா்.