ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோா் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 7:47 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோா் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டாக்டா் அம்பேத்கரின் பெயரில் மக்களின் முன்னேற்றத்துக்காக அரிய தொண்டு செய்வோருக்கு ஆண்டுதோறும் டாக்டா் அம்பேத்கா் என்ற பெயரில் தமிழக அரசு விருது வழங்குகிறது.

பட்டியலின சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம், கல்வி நிலையை உயா்த்துவதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் பாடுபட்ட ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் டாக்டா் அம்பேத்கா் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருது வழங்குவதற்கான ஊக்கத்தொகை ரூ. 5.65 லட்சத்திலிருந்து ரூ. 5.80 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவதற்கு தகுதியான பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் நவ. 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.