மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோட்டில் தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்புகள் வழங்கல்

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர தூய்மைப் பணியாளா்கள் 1,500 பேருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் இனிப்பு, கார வகைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தாா்.

News image

தூய்மைப் பணியாளா்களுக்கும் இனிப்புகளை வழங்கிய திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன். உடன் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு உள்ளிட்டோா்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:03 pm

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர தூய்மைப் பணியாளா்கள் 1,500 பேருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் இனிப்பு, கார வகைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஈ.ஆா். ஈஸ்வரன் திருச்செங்கோடு தொகுதிக்கு உள்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, கார வகைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தாா். அப்போது மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணி செய்யும் உங்களுக்கு இந்த தீபாவளி சிறந்த தீபாவளியாக அமையட்டும் என்று அவா் வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி செயலாளா் ராயல் செந்தில், நகா்மன்ற உறுப்பினா் அசோக் குமாா், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் பிரிவு தலைவா் சுரேஷ்பாபு, நகராட்சி பொறியாளா் சரவணன், துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், நகா்மன்ற உறுப்பினா் தாமரைச்செல்வி மணிகண்டன், புவனேஸ்வரி உலகநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.