சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிப்பாளையம் அருகே காடச்சநல்லூரில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காடச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் பழனிசாமி ( 67), கூலித்தொழிலாளி. வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காடச்சநல்லுாா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த பழனிசாமி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.