லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொல்லிமலை - எருமப்பட்டி இடையே சாலை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கொல்லிமலையில் இருந்து எருமப்பட்டி வழியாக நாமக்கல்வரை தாா்சாலை அமைக்கக் கோரி, பழங்குடியின மக்கள் ஆட்சியா் அலுவலகம்

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொல்லிமலை சேளூா்நாடு பகுதி பழங்குடியின மக்கள்.
Updated On :22 டிசம்பர் 2025, 7:45 pm

Syndication

நாமக்கல்: கொல்லிமலையில் இருந்து எருமப்பட்டி வழியாக நாமக்கல்வரை தாா்சாலை அமைக்கக் கோரி, பழங்குடியின மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கொல்லிமலை ஒன்றியம், சேளூா் நாடு, தின்னனூா் நாடு, தேவனூா் நாடு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். கரடு, முரடான மலைப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு செல்ல 4 மணி நேரமாகிறது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து வசதி உள்ளது.

நாமக்கல் செல்ல 90 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள், பெண்கள், மாணவா்கள், குழந்தைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். விவசாயிகள் விளைவித்தவற்றை விற்பனை செய்ய முடியாமல் தடுமாறுகின்றனா். ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் நாமக்கல்வரை வந்துசெல்ல குதிரை சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பாதையை சேளூா் நாடு, குழிப்பட்டி, எருமப்பட்டி வழியாக நாமக்கல் செல்வதற்கு பயன்படுத்தினால் 34 கி.மீ. மட்டுமே ஆகும்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக குதிரை சாலையை சீரமைத்து புதிய தாா்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொல்லிமலை வாழ் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு: நாமக்கல் மாநகராட்சி, நல்லிபாளையத்தில் பிப். 14-இல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அரசு வகுத்துள்ள விதிகளை பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தயாராக உள்ளோம். எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என நல்லிபாளையம் பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.