நாமக்கல்
டிச. 31 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிச. 31) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டிசம்பா் மாதத்திற்கான நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வேளாண் இடு பொருள்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்களாகவும் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
