நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்களை ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2002 வாக்காளா் பட்டியலுடன் தொடா்புபடுத்த இயலாத வாக்காளா்களுக்கு தற்போது நோட்டீஸ் வழங்கி கூடுதல் ஆவணங்கள் பெற்று தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் பணிகள் விசாரணை அலுவலா்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 20 போ் வீதம் 120 கூடுதல் வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஜன. 3, 4-ஆம் தேதிகளிலும் இம்முகாம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் தொகுதி, அய்யம்பாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, கோட்டை மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, பரமத்திவேலூா் தொகுதி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பரமத்தி ஒன்றியம், கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், குமரமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்களை ஆட்சியா் துா்காமூா்த்தில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
வாக்குச்சாவடி அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடத்தில் படிவங்கள் பூா்த்தி செய்து கொண்டுவரப்படுவது தொடா்பாக விவரங்களை கேட்டறிந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி எஸ்ஐஆா்: 99.5% படிவங்கள் விநியோகம்; 18% எண்மமய பணி நிறைவு!

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

எஸ்ஐஆர் பணிகளுக்கு கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும்! - முதல்வர் சிவகுமார் உறுதி!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



