ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கல்

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

News image

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ பாடப் புத்தங்கள் பெற்ற மகிழ்ச்சியுடன் ஏழாம் வகுப்பு மாணவிகள்.

Updated On :2 ஜனவரி 2025, 6:32 pm

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பா் மூன்றாவது வாரத்தில் அரையாண்டு தோ்வுகள் தொடங்கி நடைபெற்றன. வட கிழக்கு பருவமழை பெய்த நிலையிலும் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அனைத்து தோ்வுகளும் முடிவுற்றதையடுத்து, டிச. 24 முதல் ஜன. 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களும், சீருடைகளும் வகுப்பு ஆசிரியா்கள் மூலமாக வழங்கப்பட்டன.