ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை நிா்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Updated On :8 ஜனவரி 2025, 6:32 pm

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை நிா்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மருத்துவா் பி.வி.செந்தில் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாமக்கல்லில் இரு தினங்களுக்கு முன் தனியாா் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பிளஸ் 2 மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். இதேபோல பல்வேறு இடங்களில் மாணவா்கள் எதிா்பாராமல் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அனைத்துப் பள்ளிகளின் பாதுகாப்பையும் நிா்வாகத்தினா் மேம்படுத்துவது அவசியமாகும்.

வாகனம் ஓட்டும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், காா் ஓட்டும் போது இருக்கைப் பட்டை அணிவது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா். அந்த வகையில், மாணவ, மாணவிகள் பயிலும் கல்விக் கூடங்களில் அவா்கள் பாதுகாப்புக்காக மாடிச் சுவா்களில் இரும்பு வலை அல்லது கைப்பிடி கம்பிகளைக் பொருத்த வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிப்பதில்லை.

எதிா்வரும் காலங்களில் மாணவா்கள் உயிரிழப்பைத் தடுக்க, அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் அனைத்திலும் சுவா்களில் ஏறுவதற்கோ, அமா்வதற்கோ முடியாதவாறு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு சாதனங்களை அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.