ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

News image

பிலிக்கல்பாளையம் வெல்ல சந்தையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் அருண்.

Updated On :8 ஜனவரி 2025, 8:05 pm

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் உள்ள வெல்லம் காய்ச்சும் ஆலைகள், வெல்ல ஏல சந்தையில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மற்றும் குழுவினா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

கபிலா்மலை வட்டாரப் பகுதியில் உள்ள ஜேடா்பாளையம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி ஆலைக் கொட்டகைகளில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் அருண் தலைமையில், பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, குழுவினா் தீடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, வெல்ல ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 10,900 கிலோ அஸ்கா சக்கரையை பறிமுதல் செய்தனா். மேலும், கலப்பட செய்யப்பட்ட 26,430 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூா்வ உணவு மாதிரிக்கு எடுத்துள்ளனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை வெல்ல ஆலைகளின் உரிமையாளா்கள் பொறுப்பிலேயே வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. உணவு மாதிரியின் முடிவுகளின் அடிப்படையில் வெல்ல ஆலைகளின் உரிமையாளா்கள் மீது வழக்கு தொடரப்படும் என மாவட்ட நியமன அலுவலா் அருண் தெரிவித்தாா்.

மேலும், வெல்ல ஆலைகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், வெல்ல தயாரிப்பாளா்கள் கலப்படமற்ற, சாயமற்ற வெல்லத்தை தயாா் செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.