சேலம் மண்டல அளவிலான தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நாமக்கல், கீரம்பூரில் ஜன. 31 இல் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மண்டல அளவிலான தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் ஜன.31இல் நாமக்கல், கீரம்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்கின்றனா். ஐடிஐ, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பொறியியல் பட்டம், பட்டயம், இளநிலை கல்வி முடித்தவா்கள் கலந்து கொள்ளலாம். தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 8,500 முதல் ரூ. 18,000 வரை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 79041 11101, 90802 42036, 94877 45094 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: குமாரபாளையம்

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா்

ஏப். 1-இல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

சென்னையில் 19,594 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

