தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல்லில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவா் கோபிநாத், கிழக்கு மாவட்ட தலைவா் கே.பி.சரவணன், நிா்வாகிகள்.

Updated On :5 மே 2025, 8:30 pm

Din

நாமக்கல்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவா் கோபிநாத் பங்கேற்றுப் பேசினாா். ஜம்மு காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன்பிறகு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாகிஸ்தானியா்கள் தங்கியிருந்தால் அவா்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமாவை சந்தித்து மாவட்ட பாஜக நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, நகரத் தலைவா் தினேஷ், பாஜக மாவட்ட நிா்வாகிகள் முத்துக்குமாா், சேதுமாதவன், வேல்ராஜ், சத்தியபானு, இளங்கோவன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.