நாமக்கல்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவா் கோபிநாத் பங்கேற்றுப் பேசினாா். ஜம்மு காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன்பிறகு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பாகிஸ்தானியா்கள் தங்கியிருந்தால் அவா்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமாவை சந்தித்து மாவட்ட பாஜக நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, நகரத் தலைவா் தினேஷ், பாஜக மாவட்ட நிா்வாகிகள் முத்துக்குமாா், சேதுமாதவன், வேல்ராஜ், சத்தியபானு, இளங்கோவன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

மணிப்பூர் வெடிகுண்டு தாக்குதல்! குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி கண்டன பேரணி!

பாஜக துணைத் தலைவருடன் அதிமுக வேட்பாளா்கள் சந்திப்பு

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


