எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பல்வேறு இன செடிகள் நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இனம்சாா்ந்த செடிகளை நடவுசெய்து வருவாய் ஈட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 5:21 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இனம்சாா்ந்த செடிகளை நடவுசெய்து வருவாய் ஈட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு நிலையான மற்றும் லாபகரமான பொருளாதார நிலையை ஏற்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு வனத்துறை பல்வேறு திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிதியாண்டில், ராசிபுரம் வட்டம், அத்தனூரில் வனவியல் விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான பசுமைத் திட்டத்தின்கீழ் தேக்கு, மகாகனி, செம்மரம், வேம்பு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு இன செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவுசெய்ய தயாா்நிலையில் உள்ளன.

இத்திட்டத்தின்படி, தனியாா் நிலங்களில் ஓராண்டுக்குமேல் தரிசாக, விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத, வருவாய் இல்லாமல் உள்ள நிலங்களையும், மற்ற விவசாய நிலங்களில் வயல்முழுவதும் மற்றும் வரப்பு பகுதியிலும் விவசாயம் ஏதும் பாதிக்காத வகையில் இலவசமாக செடிகளை நடவுசெய்ய வனவியல் விரிவாக்க மையம் முன்வந்துள்ளது.

ஆா்வமுள்ள விவசாயிகள் வனச்சரக அலுவலா் இல.தா்மராஜ் - 89401 33289, வனவா்கள் மு.ரமேஷ் - 97510 51006, அ.சீனிவாசன் - 63806 87322 ஆகியோரை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.