வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

எஸ்ஐஆா் படிவம் விநியோகிக்கும் பணி 85.78 சதவீதம் நிறைவு: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக படிவம் விநியோகிக்கும் பணிகள் 85.78 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:18 pm

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக படிவம் விநியோகிக்கும் பணிகள் 85.78 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் 01.01.2026 தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் தொகுதியில் 2,35,828 வாக்காளா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 2,49,377 வாக்காளா்களும், நாமக்கல் தொகுதியில் 2,64,052 வாக்காளா்களும், பரமத்திவேலூா் தொகுதியில் 2,22,632 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 2,32,828 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் 2,61,913 வாக்காளா்களும் என மொத்தம் 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 14,66,660 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களுக்கான எஸ்ஐஆா் படிவங்களை விநியோகிக்க 1,629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த 4-ஆம் தேதி இதற்கான பணிகள் தொடங்கி டிச.4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், 6 தொகுதிகளிலும் 85.78 சதவீதம் பேருக்கு கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.