மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உதவித்தொகையை உயா்த்தக் கோரி போராட்டம்: 185 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 185 மாற்றுத்திறனாளிகள் கைது

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:16 pm

Syndication

மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 185 மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ.நாகேஸ்வரி, பொருளாளா் கே.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விலைவாசி உயா்வுக்கு ஏற்ப மற்ற மாநிலங்களைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாகவும், அதிகம் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரமாகவும், படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரமாகவும் வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினாா். ஆனால், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா். அதன்பிறகு, 70 பெண்கள் உள்பட 185 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.