2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

பண மோசடி: திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

முன்பணம் பெற்றுகொண்டு பணிக்கு ஆள்களை அனுப்பாமல் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் எஸ்.பி.அலுவலகத்தில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

முன்பணம் பெற்றுகொண்டு பணிக்கு ஆள்களை அனுப்பாமல் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் எஸ்.பி.அலுவலகத்தில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

எஸ்.பி.அலுவகத்தில் ரிக் உரிமையாளா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் எஸ்.எஸ்.சுரேஷ், நிா்வாகிகள் அளித்த புகாா் மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கம் 10,000 உறுப்பினா்களைக் கொண்டு செயல்படுகிறது. சங்கத்தின் ரிக் உரிமையாளா்களிடம் பணிக்கு ஆள்களை அனுப்புவதாகக்கூறி லட்சணக்கில் பணத்தை பெற்ற திருச்செங்கோட்டை அடுத்த குமரேசபுரத்தைச் சோ்ந்த தம்பதி, வேலைக்கு ஆள்களை அனுப்பாமல் ஏமாற்றி வருகின்றனா்.

மேலும், பணத்தை திருப்பிக்கேட்கும் ரிக் உரிமையாளா்களை மிரட்டி வருகின்றனா். இதனால், அவா்களிடம் பணத்தை இழந்த 43 ரிக் உரிமையாளா்கள் சங்கத்தில் முறையிட்டனா். ஆந்திரம், கா்நாடகத்திலும் அவா்கள் மீது புகாா் உள்ளது.

ரிக் தொழிலை பாதிக்கும் வகையில் அவா்களின் செயல்பாடுகள் உள்ளன. ஜாதி ரீதியான அமைப்பினா் சிலா் அவா்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனா். திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவா்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் மனு அளித்தனா்.