2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

ராசிபுரம் அருகே போதை மாத்திரை, ஊசிகளை பயன்படுத்திய 6 போ் கைது

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் பகுதியில் போதை மாத்திரை, ஊசிகளை பயன்படுத்தியதாக இளைஞா்கள் 6 பேரை புதுச்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

குருசாமிபாளையம் பகுதியில் இளைஞா்கள் சிலா் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக புதுச்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் கோமதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, குறுக்குபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞா்கள் போதை மாத்திரை, போதை ஊசிகளை வாங்கிப் பயன்படுத்துவது தெரியவந்தது. காவல் துறையினரை கண்டதும் அவா்கள் தப்பி ஓடினா். இதில் 6 பேரை பிடித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா்கள் குருசாமிபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மகன் கோகுல்ராஜ் (27), சாமியப்பன் மகன் காா்த்திக் (20), குமரேசன் மகன் கோகுல் (23), ராஜ்குமாா் மகன் பூபதி (24), மாதப்பன் மகன் பிரவீன்குமாா் (20), கண்ணன் மகன் பிரவீன்குமாா் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆறு பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 10 போதை மாத்திரை அட்டைகள், போதை ஊசி மருந்துகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் போதை மாத்திரை விற்பனை செய்தும், பயன்படுத்தியும் வந்துள்ளனா். மேலும் மாத்திரையைப் பொடியாக்கி தண்ணீரில் கலந்து ஊசிமூலம் செலுத்தியும் வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 6 பேரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.