அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாமக்கல் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 20,277 பேருக்கு சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற 15 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 20,277 பேருக்கு மருத்துவ சிகிச்சை

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:20 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற 15 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 20,277 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் உயா் மருத்துவ சேவை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 வீதம் 15 வட்டாரங்களில் 45 முகாம்களும், மாநகராட்சிக்கு 3 முகாம்களும் என மொத்தம் 48 முகாம்கள் நடைபெற்றன. வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் தகுந்த நாள்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி வளாகங்களில் முகாம்கள் நடைபெற்று வந்தன. இதில், பல்வேறு வகையான மருத்துவம் சாா்ந்த நிபுணா்கள் மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

உயா்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தலைமை மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆக.2 முதல் நவ.22 வரையில் நடைபெற்ற இந்த முகாம்களில் மொத்தம் 20,277 போ் பதிவுசெய்யப்பட்டு அவா்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதில், 4,668 தொழிலாளா் துறையினா், 3,450 அமைப்பு சாரா துறையினா், 1,293 தூய்மைப் பணியாளா்கள், 423 முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை பெற்றவா்கள், 787 மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற்றவா்கள், 8,353 ஆண்கள், 11,924 பெண்கள் ஆவா். வரும் நாள்களில் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.