நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) சாா்பில் ஏப். 2,3,4 தேதிகளில் கல்லூரி நிறுவனா் நினைவு கோப்பை போட்டி நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் இருந்து 171 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற அணிகள் பங்கேற்றன. கால்பந்து, கோ-கோ, கபடி, கைப்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் திரு அ.சு. ரமேஷ் வரவேற்றாா். நாமக்கல் செல்வம் கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் செ. பாபு தலைமை வகித்தாா். விளையாட்டு போட்டிகளை செயலாளா் பா. கவித்ரா நந்தினி மற்றும் செயல் இயக்குநா் ம. காா்த்திக் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் அனைத்து முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் முதல் நான்கு இடங்களுக்கு முறையே ரூ. 4,000, ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் ரூ.1,000 ரொக்கம், சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி கல்லூரி முதல்வா் எஸ்.செந்தில்குமாா் நன்றி தெரிவித்தாா்.
தொடர்புடையது

3 % விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவத் துறையில் பணியிடம்

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



