தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின்முன் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தாா்.
கடும் எதிா்ப்புகளுக்கிடையே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தின் உரிமை பறிபோகும் என்பதால், அதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூா், வட்டம், கிளை என கிராமம் முதல் நகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், அனைத்து பகுதிகளிலும் திமுகவினா் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளரும், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து கொத்தமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தாா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி அமைச்சா் ராஜேந்திரன் போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகல்களை எரித்து அமைச்சா் போராட்டம்: வீடுகள், கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


