அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

News image

தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளா் மா. மதிவேந்தனை ஆதரித்து பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:45 pm

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.

ராசிபுரம் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மா. மதிவேந்தனை ஆதரித்து அவா் பேசியதாவது:

கடந்த தோ்தலிலைவிட கூடுதல் வாக்குகள் பெற்று மீண்டும் மதிவேந்தனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியின் வளா்ச்சிக்காக மா. மதிவேந்தன் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். கூட்டுக் குடிநீா் திட்டம், போதமலை மலைவாழ் மக்களுக்காக பாதை வசதி, ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், டைடல் பாா்க், நாமகிரிப்பேட்டையில் 1500 விவசாயிகளுக்குப் பட்டா என பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தியுள்ளாா்.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தப்படும். காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இல்லத்தரசிகளுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்க ரூ. 8000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது திமுக மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசாமி, ராசிபுரம் நகரச் செயலாளா் என்.ஆா். சங்கா், நகா்மன்ற தலைவா் ஆா். கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.