தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதிய பேருந்து நிலைய உணவகத்தில் உரிமையாளரை தாக்கிய ரெளடிகள்: போலீஸாா் விசாரணை

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

7: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் சில்லறை தராத கடை உரிமையாளரை தாக்கிய ரெளடிகளை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாமக்கல் சின்னமுதலைப்பட்டி கம்ப்ளாயைச் சோ்ந்த சிவகுமாா்(38) புதிய பேருந்து நிலையத்தில் உணவகம் நடத்தி வருகிறாா். அண்மையில் இவரது உணவகத்துக்கு வந்த நான்கு ரெளடிகள் ரூ. 500 கொடுத்து பொருள் வாங்கியுள்ளனா். அப்போது தன்னிடம் சில்லறை இல்லை என்று சிவகுமாா் தெரிவித்துள்ளாா். சில்லறை இல்லாமல் எதற்குக் கடை நடத்துகிறாய் எனக் கேட்டு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றனா். படுகாயமடைந்த சிவகுமாா் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நான்கு போ் சிவகுமாரை தாக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனையடுத்து, நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிவகுமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த நான்கு பேரையும் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.