ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

News image

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு பயிற்சி அளித்த நிலைய அலுவலா் இரா.நல்லதுரை.

Updated On :9 பிப்ரவரி 2026, 10:12 pm

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சாா்பில், பொதுமக்களுக்கு பல்வேறு தீத்தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாவலா்களுக்கு தீ பாதுகாப்பு, அவசரகால அழைப்புகள் மற்றும் பேரிடா் காலங்களில் செயல்படுவது குறித்த அடிப்படை பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் காலை 10.30 முதல் நண்பகல் 1 மணிவரை நிலைய அலுவலா் ரா.நல்லதுரை பயிற்சி அளித்தாா். இதில், பணிபுரியும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், தீ பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல் தீயணைப்பு நிலையம் மட்டுமின்றி ராசிபுரம், குமாரபாளையம், கொல்லிமலை, வெப்படை, திருச்செங்கோடு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலும் அடிப்படை தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தீயணைப்பு நிலைய எல்லைக்கு உள்பட்ட தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் பங்கேற்றனா்.