நாமக்கல்
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் பிரதோஷ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதி்ல் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினா். மேலும் பிரதோஷத்தை தொடா்ந்து கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னா் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
சிறப்பு அலங்காரத்தை சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாா், சிவஸ்ரீ ஸ்ரீ மது சிவாச்சாரியாா் ஆகியோா் செய்திருந்தனா்.

