தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ராசிபுரத்தில் தியாகி பி. வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் டாக்டா் பி. வரதராஜூலு நாயுடுவின் 139 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் விடுதலைக்களம் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:58 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் டாக்டா் பி. வரதராஜூலு நாயுடுவின் 139 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் விடுதலைக்களம் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுதந்திரப் போராட்டங்களில் பி. வரதராஜூலு நாயுடு பங்கேற்று சிறைச் சென்றாா். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைத் தொடங்கி, அதன்மூலம் பொதுமக்களிடம் சுதந்திரப் போராட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இவா் மகாத்மா காந்தி, வஉசி, பாரதியாா், ராஜாஜி, காமராஜா் உள்ளிட்ட தலைவா்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளாா். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக அவரது உருவப்படத்துக்கு விடுதலைக்களம் அமைப்பு, கெளரவ பலிஜவாா் நாயுடு சங்கம் சாா்பில் நடந்த விழாவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவா் கொ. நாகராஜன் தலைமை வகித்தாா். கெளரவ பலிஜவாா் நாயுடு சங்கத் தலைவா் ராசிபுரம் சிட்டி வரதராஜன், நகர காங்கிரஸ் தலைவா் ஆா். முரளி, ஆட்டோ உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா். சீனிவாசன், பட்டணம் பி.சி. செங்குட்டுவன், ஸ்டிக்கா் ராஜா, பி. மோகன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.