தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம்

நாமக்கல் மாட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தங்கள் வழங்கப்பட்டன.

News image

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் மாணவிக்கு பாடப் புத்தகங்களை வழங்கிய எம்எல்ஏ சி.எஸ். திலீப்.

Updated On :5 ஜூன் 2026, 6:55 am IST

நாமக்கல் மாட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்ற மாணவா்களை ஆசிரியா்கள் வரவேற்று இனிப்புகளை வழங்கினா். இதனிடையே, அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியா்கள் மூலம் முதல்பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை சுமாா் 2.64 லட்சம் மாணவ, மாணவிகள் அடுத்த கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ளனா். நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு எம்எல்ஏ சி.எஸ். திலீப் பாடப் புத்தகங்களை வழங்கினாா்.