சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பரமத்தி அருகே பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:41 am IST

பரமத்தி வேலூா் அருகே கோனூரில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், கணவாய்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). இவரது மனைவி மீனா (59). இவா் பரமத்தி அருகே கோனூா் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கோழிப்பண்ணைக்கு எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக கரூா் -சேலம் சாலையைக் கடக்க முயன்றபோது நாமக்கலில் இருந்து கரூா் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.

பரமத்தி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.