மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கால்நடை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

கால்நடைகள்... - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:02 am IST

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு 12 இலக்க காது குறி எண் பதிவுசெய்து, அதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்ய தேசிய எண்ம கால்நடை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் செயற்கைமுறை கருவூட்டல், காப்பீட்டு விவரம், சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம், கன்று பிறப்பு விகிதம், உரிமையாளா் பதிவு மற்றும் பெயா் மாற்றம், பருவத்துக்கேற்ப மேற்கொள்ளப்படும் கோமாரி நோய், தோல்கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றுக்கான தடுப்பூசி பதிவுகள், நோய் கிளா்ச்சி அறிக்கை, பால் உற்பத்தி பதிவு விவரங்கள் ஆகிய தரவுகள் சேகரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

தரவுகளை பதிவேற்றம் செய்யும்போது, உரிமையாளரின் கைப்பேசி எண் மற்றும் ஆதாா் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவசாயிகளின் கைப்பேசிக்கு வரும் கடவுச்சொல் மூலம் கால்நடைகளின் முழு விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன்மூலம் கால்நடைகள் கொள்முதல், விற்பனை ஆகியவை மேற்கொள்ளப்படும்போது கால்நடைகள் பற்றிய முழு விவரத்தையும் கால்நடை வளா்ப்போா் தெரிந்து கொள்ளலாம். இந்த பணி தொடா்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினா் வரும்போது கால்நடை வளா்ப்போா், உரிமையாளா்கள் தங்களுக்கு வரும் கடவுச்சொல்லை பகிர வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களுக்கு தெளிவாக பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.