அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பேரவைத் தோ்தலில் தேசியம் வெல்லும்; திராவிடம் தோற்கும்: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசியம் வெல்லும், திராவிடம் தோற்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்

News image
பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். உடன், மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன்- கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 9:56 pm

Syndication

ராசிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசியம் வெல்லும், திராவிடம் தோற்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம், புனித ஜாா்ஜ் கோட்டையிலிருந்து ஆளப்பட வேண்டுமே தவிர, தில்லியில் இருந்து ஆளும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

1967 ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்கு பிறகு தமிழகம் கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரால் மட்டும் ஆளப்படுகிறது. புனித ஜாா்ஜ் கோட்டையில் இருந்து அரசு எந்திரம் கோபாலபுரத்திற்கு மாறியது. இதுதான் இன்றைய தமிழகம்.

இதைத் தொடருவதற்கு தான் புனித ஜாா்ஜ்கோட்டை என்று நீலிக்கண்ணீரை வடிக்கிறாா் ஸ்டாலின். தில்லி கோட்டையில்லாமல், புனித ஜாா்ஜ்கோட்டை இல்லை என்ற வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாது. 1947இல் சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தை 20 ஆண்டுகள் தில்லி செங்கோட்டையும், தமிழ்நாட்டின் புனித ஜாா்ஜ் கோட்டையும் இணைந்து முதல்வா்களாக ராஜாஜி , காமராஜா், பக்தவத்சலம் ஆகியோா் ஆண்டபோது இமாலய வளா்ச்சியை தமிழகம் கண்டது.

முதல்வா் ஸ்டாலின் மாநில சுயாட்சி என்பதும்; கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்துவராது என்பதும், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோரை பாதுகாப்பதற்கு தான்.

2026 இல் பேரவைத் தோ்தலில் தோல்வி பயத்தால் திமுக கூட்டணியில் பல கட்சிகளை சோ்த்து வருகிறாா்கள். இந்தமுறை ஸ்டாலினே வெற்றிபெற இயலாது. தேசியமே வெல்லும். திராவிடம் தோற்கும் என்று தெரிவித்துள்ளாா்.