தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

பரமத்தி வேலூரில் உலக மகளிா் தின விழா

பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில்

News image

மகளிா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசிய வழக்குரைஞா் உ.தனலட்சுமி.

Updated On :10 மார்ச் 2026, 12:08 am IST

பரமத்தி வேலூா்: பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வோ்டு நிறுவன செயலாளா் மு.சிவகாமவல்லி வரவேற்றுப் பேசினாா். பாண்டமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சுகந்தி சோமசேகா் தலைமை வகித்துப் பேசினாா். வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியா் கோ.சுதாதேவி முன்னிலை வகித்து பேசினாா். வழக்குரைஞா் உ.தனலட்சுமி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணவேணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பெண்களுக்கான சட்டங்கள்,திட்டங்கள், பெண்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினா்.

நிகழ்ச்சியை வோ்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் த.விஜயகுமாா் தொகுத்து வழங்கினாா். ஒருங்கிணைப்பாளா் கோ.சாந்தி நன்றி கூறினாா்.