அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராசிபுரம் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
அலுவலா்களுக்கு பயிற்சியளித்த மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன்.
Updated On :10 மார்ச் 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும், தொகுதி தோ்தல் அலுவலருமான வெ.முருகன் தலைமை வகித்தாா். வட்டாட்சியரும், உதவி தோ்தல் அலுவலருமான எஸ்.சசிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து நிலை அலுவலா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சுவா் விளம்பரங்கள், கட்சிக் கொடிகள், வாகனச் சோதனை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் ராசிபுரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலா் ராஜேந்திரன் மற்றும் காவல் துறையினா், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.