மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்பநாயுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :18 மார்ச் 2026, 11:39 pm

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்பநாயுடன் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்திக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் நிலாவை அழைத்துவந்து ஆட்சியா் அலுவலகம், ஆட்சியரக வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.

ஒருமணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.