சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அரிசி வியாபாரியிடம் ரூ.59,400 பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:04 pm

நாமக்கல் அருகே அரிசி வியாபாரியிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ. 59,400 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த ஐயப்பன் (49), ஆந்திர மாநிலம், நெல்லூரில் அரிசி விற்பனை செய்துவிட்டு நாமக்கல் வழியாக எடப்பாடிக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தாா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் எா்ணாபுரத்தில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.59,400 இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.